
தமிழ்நாட்டில் திமுக அரசு பாஜகவின் ஆதரவுடன் காவிநாடாக்க முயற்சி மேற்கொள்வதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்துள்ளார்.
சொற்பொழிவு சர்ச்சையில் சிக்கிய விஷ்ணு என்ற நபர், திமுக அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசிற்கு பச்சை கொடி காட்டுவதே பள்ளிக்கல்வித்துறையின் பணியா? மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.