ஜிம்பாவே கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ‌ ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் ஆட்டத்தை தொடங்கிய ஜிம்பாவே அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், 2-வது இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது அயர்லாந்து அணியின் வீரர் ஆண்டி மெக்ரைன் ஓடியே ரன்கள் எடுத்துள்ளார். அதாவது எந்த ஒரு ஓவர் த்ரோவும் இல்லாமல் ஃபீல்டர் பவுண்டரி லைனில் பந்தை தடுத்து வீசுவதற்கு முன்பாகவே மெக்ரைன் மற்றும் லார்கன் ஜோடி ஓடினர். இதனால் அவர்கள் 5 ரன்கள் எடுத்தனர். பவுண்டரியை தடுக்கப் போனதால் ஜிம்பாப்வே வீரர்கள் 5 ரன்களை இழந்துவிட்டனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.