
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்பது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை விட்டு செய்ய சொல்ல முடியாது.
பட்டியலினத்தவர்கள், பெண்கள் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது. ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை. பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான் என தெரிவித்துள்ளார்.