
ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பணியாற்றும் 40 வயதான ஆசிரியை ஒருவர், தன்னுடைய வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க உதவுவதாக ஆசை காட்டி, ஆசிரியை அவரது வீட்டிலும், ஹோட்டல்களிலும் அழைத்துச் சென்று பலமுறை மாணவனுடன் தவறான உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மாணவன் பதிவு செய்த சில வீடியோக்கள், வழக்கின் முக்கிய ஆதாரமாக பயன்பட்டுள்ளன.
மாணவனின் கூறுகைகளின்படி, கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த துன்புறுத்தல் தொடர், தொடர்ந்து செப்டம்பர் வரை நீடித்துள்ளது. தனது கணவர் இல்லாத நேரங்களில் மாணவனை வீட்டுக்கு அழைத்து ஆசிரியை தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில், ஹோட்டல்களிலும் சந்தித்து, மாணவனை தனது உறவினர் என பதிவு செய்து அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததும், ஆசிரியை மாணவனையே குற்றவாளி எனச் சொல்லி பொய்யான புகாரை அளித்தது தெரியவந்துள்ளது.
மாணவன் கோர்ட்டில் ஜாமீன் பெற்ற பிறகு, உண்மை நிலைமை தனது பெற்றோரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். இதையடுத்து, மாணவனின் தந்தை ரேவாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மார்ச் 13ஆம் தேதி ஆசிரியை மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும் ஆசிரியை தலைமறைவாகியதுடன், தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தும் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது.
புதிதாக 20 ஜூன் 2025 அன்று, ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையில், நீதிபதி சந்தீப் மோதகில் ஜாமீனை மீண்டும் மறுத்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.