கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது.

இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள் மீது விழுந்ததால் குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல் ஆய்வாளரான உசேன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். பின்பு காயமடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த அவர் பேருந்தின் மீது பட்டாசு வெடித்த அந்த கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவரை கைது செய்தார்‌.

கைது செய்த தென்னரசுவிடம் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அருண் என்ற நபர் உசைன் மீது கல் எடுத்து வீசி உள்ளார். இதனால் உசேனின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து காவலரை தாக்கிய அருண் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.