
நாட்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் விக்யன் தாரா திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.10,579 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன், மனிதத் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்துதல் போன்றவைகள் இருக்கிறது. மேலும் இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.