
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட மதன்குமார் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதன்குமார் கூறியதாவது ரமணியும் நானும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்.
இரண்டு ஆண்டுகளாக காதலித்தோம். எனது பெற்றோரிடம் காதல் பற்றி கூறினேன். ரமணியை திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்ற பெண் கேட்டனர். அதற்கு ரமணியின் பெற்றோர் எனது மகள் ஆசிரியராக இருக்கிறார். மீன்பிடி தொழில் செய்பவருக்கு எங்கள் மகளை தர விருப்பமில்லை என கூறிவிட்டனர். ஆனாலும் தொடர்ந்து ரமணியிடம் பேசி திருமணத்திற்கு எப்படியாவது பெற்றோரை சம்மதிக்க சொல் என கூறினேன்.
ஆனால் ரமணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை ரமணி நிறுத்திவிட்டார். எவ்வளவு எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளவே இல்லை. இதனால் பள்ளிக்கு சென்று நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறினேன். ஆனால் ரமணி உன்னை திருமணம் செய்ய முடியாது. நீ இங்கிருந்து போய் விடு என விரட்டினார். எவ்வளவு போராடியும் திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.