திருப்பத்தூர் மாவட்டம் வண்ணிய அடிகளார் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று அமைந்துள்ளது. குப்பன் என்பவர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். நேற்று அந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கடையின் உள்ளே இருந்தவர்கள் தீ பற்றி எரிந்ததை பார்த்ததால் உடனடியாக வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பின்பே குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் உள்ள லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது குடோனில் வைத்திருந்த பழைய கார்களின் உதிரி பாகங்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.