சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது அந்த  வீடியோவில், ஒரு இளம் பெண்  ஒருவருடன் பின்னால் மருந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். அந்த நேரத்தில், அவரது சேலை காற்றில் பறந்துவந்த நிலையில், பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதை கவனிக்கும்படி சைகை மூலம் எச்சரிக்கிறார். ஆனால், அந்த பெண் அதைப் பொருட்படுத்தாமல் முன்னே செல்கிறார். சில நொடிகளில், சேலை பின்சக்கரத்தில் சிக்கி, அந்த பெண் சாலையில் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்.

இந்த சோகமான சம்பவம் Prof Cheems என்ற X கணக்கில் பதிவாகியுள்ளது. தற்போது இது 6.9 ஆயிரம் லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகளை பெற்று வைரலாக பரவுகிறது. பொதுமக்கள் இந்த வீடியோவை “நேரில் நடந்த உண்மை சம்பவமா அல்லது ஸ்கிரிப்ட்டு வீடியோவா?” என கேள்வியெழுப்பினாலும், “இப்படி துப்பட்டாவை கவனிக்காமல் தாறுமாறாக சாலையில் பயணிப்பது  மிகவும் ஆபத்தானது. இது தற்கொலைக்கு சமம்” என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர், “இதுபோன்ற வீடியோக்கள் விழிப்புணர்வாக இருந்தாலும், சாலையில் இவ்வாறு நடத்துவது ஆபத்தானது மற்றும் சட்ட விரோதமானது” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இது போன்ற சம்பவங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. சாலையில் பயணிக்கும் போது, துப்பட்டா, ஸ்கார்ஃப் போன்றவை சக்கரத்தில் சிக்கக் கூடும் அபாயம் இருப்பதால், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ, “பின்னால் வந்த நபர் எச்சரித்திருந்தும், அந்த பெண் அதைக் கவனிக்காமை காரணமாகவே விபத்துக்கு உள்ளானார்” என்பதை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது. மேலும் அந்த வைரல் வீடியோவில் காணப்படும் காட்சிகள் உண்மையோ அல்லது நாடகம் செய்யப்பட்டதோ என்பதற்கும் மேலாக, இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கியமானது என்பதில் மாற்றமில்லை.