
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் கிளீவ்லேண்டில் ஜூன் 23ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் தனது வளர்ப்பு குழந்தைகளை காப்பாற்ற முயன்று 92 சதவீதம் தீக்காயமடைந்த தந்தை கோர்டேல் ஷெஃபீல்ட் மருத்துவமனையில் உயிர் போராடி வருகிறார்.
30 வயதான ஷெஃபீல்ட், தனது காதலி மற்றும் 10, 11 வயதுடைய இரண்டு வளர்ப்பு குழந்தைகளுடன் கார்டன் வேலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். வெடிவிபத்தால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வெடிப்பால் தூக்கி வீசப்பட்டாலும், இரண்டு குழந்தைகளும் உள்ளே இருப்பதை அறிந்த அவர், மீண்டும் தீக்குள் புகுந்து அவர்களை காப்பாற்ற முயன்றார். இதில், அவர் கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடலில் 92 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், முழு தோலும் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது அறுவை சிகிச்சையை சந்திக்க உள்ளார். அவரது மூத்த சகோதரி சியரா அல்காவி கூறுகையில், “அவர் ஒரு ஹீரோ. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அவரால் முடிந்ததெல்லாம் செய்தார். அவரை மக்கள் போராளியாக, வீரராக அங்கீகரிக்க வேண்டும்” என உணர்ச்சிவசப்பட்டார்.
விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களின் நிலை சீராகவே உள்ளது. ஷெஃபீல்ட் குடும்பத்தினர் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள “GoFundMe” மூலம் நிதி திரட்டி வருகின்றனர். இந்த சம்பவம், பாசமும் தியாகமும் கலந்த மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாகவும், ஹெரோயிசம் எனும் வார்த்தைக்கே புதிய வரையறையாகவும் இருக்கிறது.