பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 70ஆவது சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வை முன்பு போலவே நடத்த கோரி அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு தேர்தல்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார். ஆனாலும் தேர்வர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதுகுறித்து டிஎஸ்பி அனு குமாரி கூறும் போது அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது. அவர்களின் கோரிக்கைகளை முன் வைக்கும் குழுவில் ஐந்து பேரின் பெயர்களை நாங்கள் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.