
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆளுநர் பேசும்போது திடீரென காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனை பார்த்த ஆளுநரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுங்கள். தண்ணீர் கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.