தெற்குச்சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட 4.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் பலரை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், ஒரு சிறுவன் உணவுக்கு காட்டிய முக்கியத்துவம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஜூன் 23-ம் தேதி கிங்யுவான் பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கம் வீடுகளில் லேசான அசைவுகளை ஏற்படுத்திய நிலையில், பலர் உடனடியாக பாதுகாப்புக்காக வெளியே ஓடினர்.

அந்த வேளையில் வீட்டு சிசிடிவி கேமராவால் பதிவுசெய்யப்பட்ட காட்சியில், குடும்பத்தினர் பயந்தோடி வெளியேறும்போது, சாப்பாட்டுக்கு மத்தியில் இருந்த சிறுவன் உணவுப் பாத்திரத்தை எடுத்துவிட்டு திரும்பிச் சென்று மீதமிருந்த உணவை நிரப்ப முயற்சிக்கிறான். பசியால் இருந்த அந்த சிறுவன், தந்தையின் அழைப்பையும் கவனிக்காமல், சாப்பாட்டு மேசையில் உணவை நிரப்பிய பிறகே ஓடிச் செல்கிறான்.

இந்த வீடியோ வைரலாகி, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களிடையே பல்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. “பசிக்கு தேசிய எல்லை கிடையாது” எனக் குறிப்பிடும் நெட்டிசன்கள், “உணவுக்காக இப்படியும் களமிறங்கலாமா!” என ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார்கள். சிலர் இந்த சிறுவனின் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாராட்டியிருக்க, இன்னொருவர் “நமக்கெல்லாம் உணவுக்காக இப்படியொரு தற்காப்புப் பாடம் கிடைத்துவிட்டது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது பல சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நேரத்திலும், உணவையே முதன்மை எனக் கருதிய சிறுவனின் செயலால் மக்களிடையே சிரிப்பும், சிந்தனையும் உருவாகியுள்ளது.