
பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்த நாட்டின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. இருப்பதாக இந்தியா உறுதி கூறியதையடுத்து, சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, முன்னணி முஸ்லிம் நாடுகளும் இந்த தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளன.
இந்தோனேசிய ஜனாதிபதி, இஸ்லாமிய மதம் எந்த விதத்திலும் பயங்கரவாதத்துக்கு இடமளிக்காது என்றும், மனித நேயத்துக்கேற்ப உலக சமுதாயம் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சவுதி அரேபியா மற்றும் ஐ.ஏ.இ. ஆகியன இந்தியாவுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளன.
மேலும், இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீதான நடவடிக்கை குறித்து சர்வதேச அளவில் அழுத்தம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., ஹபீஸ் சயீத்துக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கி வருகின்றன. அடுத்தடுத்த இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.