
உலகப் புகழ்பெற்ற தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன். இவருக்கு 73 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவினால் இன்று காலமானார். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதயம் தொடர்பான பிரச்சனையின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவால் இந்திய திரை உலகினரும் உலக அளவில் உள்ள ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்துஸ்தான் இசை கலைஞர் ஆன ஜாகிர் உசேன் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2024ல் 3 கிராமி விருதையும் வென்றுள்ளார். இவர் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, ரத்னா சத்யா விருது போன்றவைகளையும் பெற்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த இவரை உலக அளவில் அறிவார்கள். அந்த அளவுக்கு இவர் தபேலா இசை கலையால் பிரபலமானவர். இவர் ஒரு கம்போசர், பெர்குனிஷிஸ்ட் மற்றும் நடிகர் என பல பரிமாணங்கள் கொண்ட கலைஞர். இவர் இந்துஸ்தானி ஃபியூஷன் உட்பட ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவருடைய மனைவி அண்டோனியா ஒரு கதக் நடன கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையை வழங்கி வந்த நிலையில் தற்போது அவருடைய இழப்பு திரையுலகுக்கு பேரிழப்பாகும். மேலும் இசைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகப் புகழ்பெற்ற ஒரு கலைஞராக விளங்கி அவருக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.