
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான படிப்புகளுக்கு 3 சிறப்பு மையங்கள் ₹500 கோடியில் அமைக்கப்படும். ஐஐடி விரிவாக்கம் மூலமாக மேலும் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர் என கூறியுள்ளார்.