மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சியான் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு முக காயத்துடன் ஒருவர் வந்துள்ளார். இவருடன் சேர்ந்து இவரது உறவினர்கள் 5 பேர் வந்துள்ளனர். அப்போது காயங்களுடன் வந்தவருக்கு பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி மற்றும் அவருடன் வந்த 5 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை அளித்த மருத்துவரை 6 பேரும் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி  செய்துள்ளனர். இதனால் அந்த மருத்துவர் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றார். அதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 6 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதன் பின் பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலியல் கொடுமை செய்த 6 பேரையும் தேடி வருகின்றனர்.