
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் சுப்பிரமணி(80) என்பவர் வசித்து வந்தார். இவர் உடல்நல குறைவு காரணமாக தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் படுத்த படுக்கையாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று சுப்பிரமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு தெரு நாய்கள் சுப்பிரமணியை கடித்து குதறியது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பிரமணி இறந்த பிறகு நாய் கடித்ததா அல்லது நாய் கடித்ததால் தான் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.