
பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் ரிவ்யூஸ் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திரைப்படங்கள் உங்களை எப்போதும் பாதிக்காது. சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள்.
மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம். படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான் என கூறியுள்ளார்.