
செர்பியாவைச் சேர்ந்த 19 வயது மாடல் டிஜானா ராடோன்ஜிக், மாண்டெனேகுரோவில் நடைபெற்ற ஒரு பாராசெயிலிங் விளம்பர படப்பிடிப்பின் போது பீதி தாக்குதலால் தனது பாதுகாப்பு உபகரணங்களை நீக்கி, 150 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். சுற்றுலா பருவத்திற்கு முன் மக்களை கவர்வதற்காக நடத்தப்பட்ட இந்த படப்பிடிப்பில், டிஜானா பாராசெயிலிங் செய்கிற காட்சிகளில் பங்கேற்றார். இப்பணிக்காக முன்னதாகவே தேர்வு செய்யப்பட்ட டிஜானாவுக்கு பாராசெயிலிங் குறித்த அனுபவம் எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின் போது அவர் பறக்கத் தொடங்கியதும், திடீரென பதட்டமடைந்த டிஜானா “என்னை கீழே போடு” என அலறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவர் தனது லைஃப் ஜாக்கெட்டும் பாதுகாப்பு கயிறும் வெறித்தனமாக இழுத்ததையடுத்து, காற்றில் கட்டுப்பாடின்றி வீழ்ந்தார். கடலில் இருந்து உடல் மீட்கப்பட்டதும், மருத்துவர்கள் விழுந்த போது தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால், பலரும் அதிர்ச்சி மற்றும் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
19-year-old student reportedly has a panic attack and unbuckles her seatbelt while parasailing in Montenegro.
Tijana Radonjic sadly passed after falling into the Adriatic Sea from 160 feet in the air.
The owner of the parasailing company says Radonjic was in a cheerful mood… pic.twitter.com/miJlJQYhE8
— Collin Rugg (@CollinRugg) June 2, 2025
நிறுவனத்தின் உரிமையாளர் மிர்கோ க்ர்ட்ஜிக், “எனக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை, ஆனால் இது எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி,” என கூறினார். டிஜானாவின் குடும்பத்தினர் இந்த மரணத்துக்கான காரணங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும், “அவள் தன் உயிரைக் காப்பாற்ற முயன்றார்” எனக் கூறிள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.