வங்காளதேச நாட்டில் அகதிகள் முகாமில் ரோஹங்கியா அகதிகள் 69 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா செல்வதற்காக படகில் புறப்பட்டு உள்ளனர். இந்த படகு நேற்று காலை அந்தமான் தீவுக்கு அருகே வந்தபோது கடல் சீற்றத்தாலும் எரிபொருள் இல்லாத பற்றாக்குறையாலும் நிக்கோபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கி உள்ளது.

இது குறித்து அறிந்த அதிகாரிகளும் கடலோர காவல் படையினரும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து படகில் வந்த 69 பேரையும் மீட்டு உடனடியாக அவர்களுக்கு மருந்து, உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கினர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.