
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறுகான் படா பகுதியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது ஒரு பெண் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன்பே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடல் சிதைவடைய தொடங்கியுள்ளது. இறந்தவரை அடையாளம் காண எந்த ஆதாரமும் இல்லை. இதனால் காணாமல் போன பெண் குறித்து காவல் நிலையத்தில் சமீபத்தில் ஏதாவது புகார் அளிக்கப்பட்டுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.