2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு சிஎஸ்கே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இந்தப் போட்டியில் தோனி செய்த பெரிய தவறு என்னவென்றால் ஏழு ஓவர் மீதம் இருந்த நிலையில் தோனி விளையாடாமல் mitchel satner- ஐ களம் இறக்கியதுதான் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. இதுவே தோனி களமிறங்கி இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.