
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகளில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த இந்திரா காந்தியால் கூட இதனை செய்து காட்ட முடியவில்லை. 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியே தோல்வியை தழுவினார். ஆனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை என்று பகிர்ந்து உள்ளார்.