நெல்லையிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் எலகங்கா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஜூன் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதனைப் போலவே மறுமார்க்கமாக எலகங்காவில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஜூன் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றதுபோல பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.