அக்டோபர் மாத தொடக்கம் முதலில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு 58, 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ஒரு கிராம் 65 வரையில் உயர்ந்து 7360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 59 ஆயிரத்தை நெருங்கி வருவது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7000 ரூபாயாகவும் இருக்கிறது.