
மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என செந்தில்குமார் அடிக்கடி கூறிவந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாலதியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என அவருடைய கணவர் கூறினார். இதனால் ஆத்திரத்தில் மாலதி தன் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் 40% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பன் திருப்பதி காவல்துறையினர் மாலதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.