திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7வது தெருவில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தரமணியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஐஸ்வர்யா திருவொற்றியூர்- அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு ஐஸ்வர்யா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.