நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சக போலீசார் கதவை தட்டினர்.

ஆனால் நீண்ட நேரமாக அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது காமாட்சி மயங்கிய நிலையில் கிடந்ததால் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காமாட்சியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.