சமூக வலைதளத்தில் தற்போது பணியிடங்களில் மனித நேயமற்ற சம்பவம் ஒன்று நடந்த காட்டும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பரவிவருகிறது. அதாவது லண்டனில் இருந்து Ben Askins என்ற நபர், வேலைவாய்ப்புகளில் ஏற்படும் அடக்குமுறைகள் மற்றும் மன அழுத்தங்களை பகிர்ந்து வருவார். இப்போது, ஒரு நிறுவன ஊழியர் பைக்கில் விபத்துக்குள்ளாகி கால் முறிந்த நிலையில், தனது மேலாளரிடம் சிகிச்சைக்காக விடுப்பு கேட்டபோது, மேலாளர் “நீ கண்டிப்பா வரணும்… நா உனக்கு நாற்காலி தர்றேன்” என வற்புறுத்திய அதிர்ச்சிகர உரையாடல் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வாட்ஸ்அப் உரையாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்க, மேலாளர் “இந்த வெள்ளிக்கிழமை ஷிப்ட் வேணும்” எனக் கூறுகிறார். ஊழியர் தாழ்மையாக “டாக்டர் ஓய்வு சொல்லிருக்காரு, ஏதாவது நடந்தா பொறுப்பு யாரு?” என பதிலளிக்க, மேலாளர் திரும்பவும் நாற்காலி தருவதையும், இப்பவே லீவு எடுக்குறதா என்றும் guilt trip செய்வது போல் பேசுகிறார். இதனால் மன அழுத்தமடைந்த ஊழியர், “இதுக்கு பதிலா வேலையை விட்டுவிடுகிறேன்” என பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம், உலகம் முழுவதும் பணியிடங்களில் மனிதநேயமற்ற கையாளுதல் குறித்து விவாதங்களை கிளப்பியுள்ளது. இதேபோல் பலரும் தங்களது அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இது பற்றி ஒருவர் கூறியதாவது, “நான் தைராய்டு கட்டியால் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் பிறகு 3 நாள் டிஸ்சார்ஜ் ஆனதும், HR என்ன நோக்கம் என கேட்டார். நான் சொன்னேன் – ‘நான் உயிரோடு இருக்க நினைக்கிறேன்’ என்று அவர் பதிலுக்கு – ‘அது இல்ல, எப்ப வேலைக்கு வர்ற’ன்னு கேட்டார்” என கூறியுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், “நான் காலில் tendonitis பாதிக்கப்பட்டு இருந்தப்போ வேலைக்கு வர சொன்னார்கள். நான் நிற்க முடியாம இருக்கேன்னு சொன்னதும், ‘ஒரு கால் மேல நின்னு வேலை பண்ணலாமே!’” என மேலாளர் கூறியததாக பகிர்ந்துள்ளார். மேலும் இதுபோன்ற பலரும் தங்களுக்கு பணியிடங்களில் நடந்த அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில் இந்த மனநிலை மாற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.