நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை திருச்சியில் சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அனைத்துக் கட்சிகளையும் எதிர்ப்பவன். அப்படி இருக்கும்போது அதிமுகவும் பாஜகவும் நான் ஜெயிக்க வேண்டும் என்று எப்படி விரும்புவார்கள். அவர்களுடைய ஓட்டுகள் எனக்கு விழுந்தது என்று கூறுவது சரியல்ல. நான் வீரன். எனக்கு படை தேவை கிடையாது சண்டைக்கு தனியாகத்தான் போவேன். என்னை அடிக்க வரான் என்று நான்கு பேரை கூட்டிட்டு போவதற்கு நான் ஒன்னும் நாய் நரி கிடையாது. நான் புலி. வேட்டைக்கு தனியாகத்தான் போவேன். நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வதை தான் இப்போதும் சொல்கிறேன் நான் எப்போதும் தனியாக தான் இருப்பேன்.

கோழைகள் தான் கூட்டத்தோடு இருப்பார்கள். கூட்டத்தில் நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை கிடையாது. தனியாக இருப்பவர்களுக்கு தான் வீரமும் துணிவும் தேவை. என்னுடைய கோட்பாடு எப்போதும் தனித்து தான் இயங்கும். என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பவர்கள். நாம் தமிழர் கட்சியில் ஆட்சியில் இருந்தால் வரிகொடா  இயக்கம் நடத்துவோம்.மேலும் இப்போதுதான் பெரியார் பற்றி பேசத் தொடங்கியுள்ளேன் இன்னும் போகப்போக நிறைய பேசுவேன் என்று கூறினார்.