பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறும் நிலையில் நான் தான் தலைவர் என அன்புமணி கூறுகிறார். அதன்பிறகு தன் மகன் அன்புமணி மீது ராமதாஸ் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில், பாமக தற்போது இரு பிரிவுகளாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே அப்பா மற்றும் மகன் இடையே சமாதான பேச்சுவார்த்தையை கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தான் ஜாதகம் பார்த்துவிட்டதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் பாமக்காவில் நிலவி வரும் குழப்பம் தீர்ந்து தந்தையும் மகனும் இணைவார்கள் என அக்கட்சியின் எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று எம்எல்ஏ சதாசிவம் கூறியதாவது, பாமக கட்சியில் சிறு சிறு மன வருத்தங்கள் குழப்பங்கள் நிலவுகிறது. சிவபெருமானிடம் கோபித்துவிட்டு முருகன் பழனிக்கு செல்லவில்லையா. எனவே பத்திரிகை நண்பர்கள் எங்களை பிரித்து எழுதாமல் சேர்த்து எழுதுங்கள். நான் ஜாதகம் பார்த்து விட்டேன். விரைவில் பாமக கட்சியில் நிலவும் குழப்பங்கள் அனைத்தும் சரியாகிவிடும். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று கூறினார்.