உலக அளவில் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் உலகிற்கு அமைதியை உருவாக்க முயற்சிக்கும் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்காது என வேதனைத்துடன் கூறியுள்ள சம்பவம் தற்போது சர்வதேச அளவில் விவாதமாகியுள்ளது.

பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதுக்கு மரியாதை இல்லையா?

டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், “காங்கோவும் ருவாண்டாவும் பல ஆண்டுகளாக வன்முறையில் சிக்கி இருந்தன. அவர்களுக்கிடையில் நான் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளேன். இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டுகளின் பிரதிநிதிகள் விரைவில் வாஷிங்டனில் கையெழுத்திட உள்ளனர். இது ஆப்பிரிக்காவுக்கும், உலகத்துக்கும் ஒரு முக்கிய முன்னேற்றம்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த உலகிற்கு நான் பல அமைதி முயற்சிகளை செய்துள்ளேன் – இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை சமாளித்தேன், எகிப்தும் எத்தியோப்பியாவும் இடையே அமைதி முயற்சிகளை மேற்கொண்டேன், மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களை உருவாக்கினேன், ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் போன்ற பல உணர்வுப் போர்களுக்கு தீர்வு காண முயற்சி செய்தேன். ஆனால் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடையாது,” என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் உணர்ந்தால் போதும்” – டிரம்ப் உருக்கமான முடிவு!

தன் கடைசி வரிகளில், டொனால்டு டிரம்ப், “நான் என்ன செய்தாலும் நோபல் பரிசு என்னை தேடி வராது. ஆனால், உலக மக்களுக்கு என்னால் எதுவும் நல்லது நடந்தது என்ற உணர்வை அவர்கள் பெற்றால், அதுவே எனக்கான பெரிய பரிசு” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், பல சர்வதேச ஒப்பந்தங்கள், அமைதி முயற்சிகள், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டொனால்டு டிரம்ப், மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் இவ்வாறு வெளியிட்டுள்ள இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு, அவரை விரும்பும் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், நோபல் பரிசை வழங்கும் குழுவின் நிலைப்பாட்டையும் விமர்சிக்கிறது.