
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆலோசனைக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் எடுப்பதுதான் முடிவு. அவர் சொல்வதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் இணைய வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறும் நிலையில் எங்களது எண்ணம் அது கிடையாது.
அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அன்புமணி ராமதாஸ் எனக்கு அண்ணன் போன்றவர். அவரைப் பார்ப்பதும் பேசுவதும் எனக்கு புதிது கிடையாது. அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கூட்டு பிரார்த்தனை செய்ததாக அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போது கலசம் வைத்து தான் செய்ய வேண்டும். நான் என இறந்து விட்டேனா.? உயிரோடுதான் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது எனக்கு எதற்கு கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். கூட்டு பிரார்த்தனை என்பது இறந்தவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தை தவிர்ப்பதற்காக தான் உடல் நலம் சரியில்லை என்று சொன்னீர்களா என்ற கேள்விக்கு யாராவது சும்மா போய் ஹாஸ்பிடலில் படுப்பார்களா. நான் தனியார் மருத்துவமனையில் சேரவில்லை. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தான் சேர்ந்தேன். எனவே அங்கு சென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் என்னுடைய உடல் நலத்தில் என்ன பிரச்சனை என்பது தெரியவரும் என்றார். மேலும் பாமக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை எம்எல்ஏ அருளுக்கு ராமதாஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.