
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். அதில் பணியாற்றிய இந்திய ராணுவ பாதுகாப்பு படையின் பிளாக் கேட் கமாண்டோ வீரர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசித்திரமான மனுத்தாக்கல் ஒன்று செய்துள்ளார்.
அதாவது வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக கருதப்படும் பிளாக் கேட் கமாண்டோ வீரர் அந்த கொலை வழக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஏற்கனவே மனைவி கொலை செய்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு, பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் அதனை எதிர்த்து அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்ததன் மூலம் உயர் நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆப்ரேஷன் சிந்துரில் பணியாற்றியதற்காக மட்டும் இந்த கொலை குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.
மேலும் இந்த வழக்கில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்றும் உடனடியாக சரணடைய வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து மனுதாரர் சரணடைய சிறிது கால அவகாசம் கேட்டார். அதன்படி அவருக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.