
மதுரையில் கடந்த 14ஆம் தேதி அன்று நாதக நிர்வாகி பாலமுருகன் அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தந்தை மகாலிங்கம், மகன் அழகு விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.