மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு கண்டனர் தெரிவித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடம்பில் 150 mg வரை விந்தணுக்கள் இருப்பதாகவும் இதனால் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு  சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் தான் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று கூறப்பட்டதாக தெரிந்தது. இந்நிலையில் தற்போது கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை எதுவும் செய்யப்படவில்லை எனவும், சஞ்சய் மட்டும்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது சந்திராய்தான் குற்றவாளி என்று சிபிஐ தெரிவித்துள்ளதால் அவருக்கு கோர்ட் என்ன தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.