
நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் இ-சேவை கேந்திரா என்ற சேவை மையம் நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. நடமாடும் இ-சேவை மையத்தை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு தொடுப்பவர்கள் மின்னஞ்சல் மூலமாக வழக்கை பதிவு செய்யவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறியவும் இது பெரும் உதவியாக இருக்கும்.