
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் 25 வயதாகும் 4 இளம் பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரியா சரோஜ் , லோக் ஜனசக்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்பவி சவுத்ரி மற்றும் சஞ்சனா ஜாதவ் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.