
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது கிடையாது. முருகன் மாநாடு என்பது அரசியல் மாநாடு கிடையாது பக்தர்களுக்காக நடத்தப்படும் மாநாடு.
இந்த மாநாட்டில் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருகிறார்கள். மேடையில் தலைவர்கள் அனைவரும் இருக்கும் நிலையில் அரசியல் கருத்துகள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு என்பதால் முருக பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம். மேலும் நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ள நிலையில் 2026-ல் தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறினார்.