
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது . அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரநூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், மூன்று சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 70 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 110 ரூபாய், மாதாந்திர கட்டணம் 2395 ரூபாய் ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய 115 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 175 ரூபாய், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 245 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 365 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 265 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 400 ரூபாய் கட்டணம் ஆகும். அதனைப் போலவே நான்கு சக்கரம் மற்றும் ஆறு சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 350 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 570 ரூபாய் கட்டணம் ஆகும். உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் 340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.