
மும்பையை சேர்ந்த 23 வயது இளம்பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு அந்த மாணவி சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த இளம்பெண் தற்போது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது, இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜித் என்பவர் எனக்கு பழக்கமானார். அவர் எனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி பணம் கேட்டார்.
அவருடன் சேர்ந்து அவரது தந்தையும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். நான் பணம் இல்லை என கூறியதால் எனது அந்தரங்க புகைப்படத்தை சுஜித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். எனவே தந்தை மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் அவரது தந்தை வின்சென்ட் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.