உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பவரின் காரில் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனின் சடலம் கண்டறியப்பட்டது‌. கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி ‌9 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுவனை நரபலி கொடுத்து விட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தான் தற்போது உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் நடத்திய பலகட்ட விசாரணைக்கு பிறகு 13 வயது மாணவன் ஒருவன் தான் கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது இந்த சிறுவன் பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்பதற்காக சக மாணவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று விசாரித்துள்ளான். அதாவது பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவன் தான் 9 வயது சிறுவனை கொலை செய்து  தலைமை ஆசிரியரின் காரில் சடலத்தை போட்டுள்ளது தெரியவந்தது. இந்த குற்றத்தை மாணவன் ஒப்புக்கொண்ட நிலையில் டவலை வைத்து கழுத்தை நெரித்ததாக கூறியுள்ளான். மேலும் இதனை சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் உறுதி செய்து மாணவனை கைது செய்துள்ளனர்.