தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் என்று ஹிந்தி, ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் தனுஷ் மீது தற்போது நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து அறிக்கை வெளியிட்டது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகர் தனுஷ் அண்ணன் மற்றும் அப்பா தயவில் தான் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். அதே சமயத்தில் போராட்டம் நிறைந்த சினிமா உலகத்தில் தனி ஆளாக நின்று போராடி புகழின் உச்சிக்கு நான் சென்றுள்ளேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். அதாவது நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற 3 வினாடிகள் பிடிஎஸ் காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் நயன்தாராவின் கோபத்திற்கு இதுதான் காரணமாக அமைந்துள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை தெரியவரவில்லை என்றாலும் கொட்டுக்காளி இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சிவகார்த்திகேயன் நான்தான் வளர்த்து விட்டேன், நான்தான் உயர்த்தி விட்டேன் என்றெல்லாம் கூறமாட்டேன் என்றார். அவர் தனுசை மறைமுகமாக தாக்கி தான் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த போது தனுஷ் மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் நடனமாடி இருப்பார். அந்த படத்தில் நடனமாட நயன்தாராவை அணுகிய போது 2 முதல் 3 கோடி வரை சம்பளம் தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் நட்பின் காரணமாக சம்பளமே வாங்காமல் நயன்தாரா அந்த பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த தகவலை தனுஷ் தான் ஒரு பேட்டியில் கூறினார். அதோடு சமந்தா மற்றும் நயன்தாரா இருவரில் யார் நெருங்கிய நண்பர்கள் என்று கேட்டபோது நயன்தாரா தான் என்றும் கூறினார். அப்போது சிவகார்த்திகேயன் உடன் இருந்தார். மேலும் இந்த பேட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நயன்தாரா உங்களுக்காக சம்பளமே வாங்காமல் நடனமாடிய நிலையில் நீங்கள் மட்டும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

`