“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படக்கூடிய நிலை உருவாகும்” என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மூல மொழிகளுக்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாட்டின் சொந்த மொழிகள் விளங்கும் என்பதை எடுத்துரைத்தார்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித் ஷா, “நம்முடைய இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள். இவை இல்லாமல், நம் அடையாளமே குன்றியதாயாகிவிடும். எந்த அந்நிய மொழியும் – குறிப்பாக ஆங்கிலம் – நமது இந்திய சமுதாயத்தின் முழுமையையும், அதன் அடையாளங்களையும் புரிந்து கொள்ளுவதற்கு போதுமானதல்ல,” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவில் விரைவில் ஆங்கிலம் பேசுவது பெருமையாக இல்லாமல், வெட்கப்படத்தக்க நிலையாக மாறும். நமது மொழி, நம் மதம், வரலாறு, கலாசாரம் அனைத்தையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதை நம் சொந்த மொழியிலேயே கற்றுக்கொள்ள வேண்டும். அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் உண்மையான இந்தியா குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றும் கூறினார்.

அமித் ஷாவின் இந்த கருத்துகள், தற்போதைய மொழி அரசியல் விவாதங்களுக்கு புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் கருதப்படுகின்றன.