சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது, ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க காரன் ஆவின் நெய்யை தான் விரும்புகிறான். ஆவின் நெய் ரூபாய் 50 அதிகமாக இருந்தாலும் அமெரிக்க காரர்கள் நமது நெய்யை தான் விரும்புகிறார்கள்.

ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.