ஹரியானா மாநிலம் பதேஹாபாத் என்ற மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூப் சிங். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் பேட்டால் நண்பர் பூப் சிங்கின் தலையில் அடித்துள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூப் சிங்கை உடனடியாக  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவான அனிஷை போலீசார் கைது செய்தனர்.