அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பரம் வரி விதிக்கும் சட்டத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதாவது அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதி வரி பொருட்களுக்கு அந்த நாடு அமெரிக்காவுக்கு எவ்வளவு வரியை விதித்ததோ அதே வரியை அமெரிக்காவும் விதிக்கும். இதற்கான சட்டத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து போட்ட பிறகு டிரம்ப் பேசியதாவது, அமெரிக்காவின் நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கிறது. நமக்கு எதிராக நட்பு நாடுகள் தான் இருக்கிறது. எலான் மஸ்க் இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்புகிறார். ஆனால் இந்தியா அதிக வரி விதிக்கிறது.

எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கிறது என்று கூறினார். இந்நிலையில் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருடன் விளையாட விரும்பினால் 100% வரி விதிக்கப்படும் என்று இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் டிரம்பின் இந்த அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில் இந்தியாவுடனான வர்த்தக உறவும் பாதிக்கப்படும் என்கிறார்கள்.