நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ள நிலையில் அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் ரொம்ப பாவம். தெரியாமல் போய் சிக்கிக்கொண்டார். இது என்னுடைய கருத்து. திரை உலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். புகழ் பெற்றவர்கள் கூட போதை பொருளை பயன்படுத்தும்  நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தெரியாமல் சிக்கிக்கொண்டார்.

திரை உலகில் மட்டுமல்ல கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் கூட கொக்கைன், அபின் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகிறது. அரசு நினைத்தால் தான் போதை பொருளை ஒழிக்க முடியும். நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற நடிகர் என்பதால் தற்போது இந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த கேள்விக்கு நான் இன்னும் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது பற்றி முடிவு செய்யவில்லை. பொறுமையாக இருங்கள் கூட்டணி தொடர்பாக நானே பதிலளிக்கிறேன் என்று கூறினார்.