
கேப்டன் விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிச.28ஆம் தேதி காலமானார். அப்போது விஜயகாந்த்திற்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும்போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் விஜய் மீது செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செருப்பு வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல்நிலையத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புகார் அளித்தனர்.